Breaking News: காவிரியில் 1.42 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்.. தமிழகத்திற்கு வெள்ள எச்சரிக்கை
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.42 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.42 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதனால் தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போது கபினியிலுருந்து 80,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 62,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி 120.85 அடியை தாண்டியுள்ளது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரி வெள்ளம் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் - அமைச்சர் உதயகுமார்
சமூக வலைதளங்களில் மக்கள் வெள்ளம் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்
பேரிடர் மேலாண்மை மீட்புக்கு, அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு
1077, 1070 எண்களை தொடர்பு கொள்ளலாம் - அமைச்சர் உதயகுமார்