நிரம்புகிறது கேஆர்எஸ்.. கர்நாடகாவில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காவேரியில் அதிகரிக்கும் தண்ணீர்...முழு கொள்ளளவை நெருங்கும் கே.ஆர்.எஸ். அணை- வீடியோ
மைசூர்: கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்ப உள்ளதால், கர்நாடகாவில், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காவிரி நீராவரி, வாரியம் வெளியிிட்டுள்ள செய்திக்குறிப்பு: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ் அணை தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்க கூடும். எனவே, காவிரி கரையோர மக்களும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications