யாருக்கான பட்ஜெட் இது.. மொத்தமாக புறக்கணிக்கப்பட்ட தென்னிந்தியா!
இந்த வருட பட்ஜெட்டில் தென்னிந்தியா மிகவும் அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: இந்த வருட பட்ஜெட்டில் தென்னிந்தியா மிகவும் அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று மாநிலங்களுக்கு முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
கர்நாடகா மட்டுமே தென்னிந்தியாவில் சில நலத்திட்டங்களை பெற்று இருக்கிறது. மற்ற கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மோசமாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.
இது மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது மூன்று மாநிலங்களின் எதிர்காலத்தை அதிகம் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் 2018
இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். இதற்கு பின் அடுத்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதேபோல் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்டும் இதுதான். மேலும் இதனுடன் ரெயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
கவனம்
தேர்தலை கவனத்தில் கொண்டே இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் 8 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும், அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது. இதனால் அந்த மாநிலங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது.
கர்நாடகாவுக்கு மட்டும் கவனம்
இந்த வரிசையில் கர்நாடகாவிலும் விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் பெங்களூர் சார்ந்து நிறைய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. பல கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகள் அந்த மாநிலத்திற்காக வெளியிடப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில் புறக்கணிப்பு
ஆனால் தேர்தல் இப்போதைக்கு இல்லாத தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம், ஆந்திராவிற்கு சில திட்டங்கள் மட்டும் கிள்ளி போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலங்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.