மாட்டுத்தீவன ஊழல்.. லாலு பிரசாத் யாதவ்வின் ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்
ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதிய மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
900 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக தும்கா கருவூல மோசடி வழக்கில் லாலுடிபிரசாத் யாதவ்க்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிபதி சிவ்பால் சிங் தீர்ப்பளித்தார். இதனால் அவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ் நான்கு தீவன மோசடி வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார், அதற்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூன்று வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நான்காவது வழக்கான தும்கா கருவூல மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். ஆனால் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் லாலுவின் மனுவை இன்று நிராகரித்துள்ளது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாமின் கோரி இரண்டு மாதங்களுக்கு பிறகு மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால், ஜாமீன் கிடைக்குமா என்பதை அறிய இன்னும் இரண்டு மாதம் லாலு பிரசாத் யாதவ் காத்திருக்க வேண்டும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications