கேரளாவில் வனத்துறை சோதனைச் சாவடி மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 3 ஊழியர்கள் கடத்தப்பட்டு விடுவிப்பு!
மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் பூக்கோட்டுப்பாறை என்ற இடத்தில் வனத்துறையின் சோதனை சாவடி மீது மாவோயிஸ்டுகள் நேற்று தாக்குதல் நடத்தினர். அத்துடன் 3 வனத்துறை ஊழியர்களையும் அவர்கள் கடத்திச் சென்று பின்னர் விடுதலை செய்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் காலூன்றி உள்ளனர். அட்டப்பாடி, நிலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவோயிஸ்டுகளுக்கும் கேரளா போலீசாருக்கும் இடையேயான மோதல் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் மலப்புரத்தில் டி.கே. காலனி என்ற பகுதியில் பூக்கோட்டுப்பாறையில் வனத்துறையின் செக்போஸ்ட் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அத்துடன் அங்கு பணியில் இருந்த 3 வனத்துறை ஊழியர்களை துப்பாக்கி முனையில் அவர்கள் கடத்திச் சென்றனர்.
பின்னர் திடீரென 3 பேரையும் மாவோயிஸ்டுகள் விடுதலை செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து வனப்பகுதி சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக- கேரளா எல்லையில் நாடுகாணி காவல்துறையில் பலத்த சோதனைகளுக்குப் பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications