For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த இந்திராணியின் இந்திரஜாலத்திற்கு அளவே இல்லையோ?

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: ஷீனாவை கொலை செய்த பிறகு தன்னிடம் பணியாற்றிய பெண் ஒருவரை வைத்து தனது மகளின் கையெழுத்தை போட வைத்துள்ளார் இந்திராணி.

ஷீனா போரா கொலை வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஷீனா கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி தனது தாய் இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்திராணி செய்த வேலை ஒன்று பற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில்,

ஷீனா

ஷீனா

ஏப்ரல் 25ம் தேதியில் இருந்து ஷீனா வேலைக்கு வராததால் அவரது அலுவலகத்தில் இருந்து அவரது செல்போனுக்கு அடிக்கடி போன் செய்துள்ளனர். போனை எடுத்த இந்திராணி ஷீனா போன்று பேசி தான் வெளிநாடு செல்வதால் வேலையை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ராஜினாமா கடிதம்

ராஜினாமா கடிதம்

வேலையை விட்டு விலகுவதாக இருந்தால் முறையாக கடிதம் அனுப்புங்கள் என்று அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். அதற்கு இந்திராணி தன்னிடம் பணிபுரிந்த பெண் ஒருவரிடம் ராஜினாமா கடிதம் எழுதுமாறு கூறியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் ஷீனா போன்று கையெழுத்திடுமாறும் கூறியுள்ளார்.

இமெயில்

இமெயில்

இந்திராணி இமெயில் மூலம் ஷீனாவின் கையெழுத்தை அந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஷீனாவின் கையெழுத்து தொடர்பாக இந்திராணி மற்றும் அந்த பெண் இடையே 21 இமெயில்கள் சென்றுள்ளன.

வீடு

வீடு

ஷீனா அமெரிக்கா சென்றுவிட்டதாகக் கூறி தான் இந்திராணி தன்னிடம் வேலை பார்த்த பெண்ணை போலிக் கையெழுத்து போட வைத்துள்ளார். அவரை வைத்தே ஷீனா வாடகைக்கு இருந்த வீட்டின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளார் இந்திராணி. போலி கையெழுத்திட்ட பெண்ணை நாங்கள் சாட்சியமாக ஆக்க உள்ளோம் என்றார் போலீஸ் அதிகாரி.

English summary
Indrani Mukerjea and a forger have exchanged 21 emails about Sheena Bora's signature.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X