Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறையில் "பேரிகேட்" வைத்து சசிகலாவுக்கு இடம் ஒதுக்கிய அதிகாரிகள்: ரூபா அளித்த ஷாக் ஆதாரம்

பெங்களூரு சிறையில்சசிகலா பயன்படுத்துவதற்கென தனியாக 150 அடி பரப்பளவு இடத்தை ' பேரிகார்டர்' வைத்து ஒதுக்கீடு செய்திருந்தனர் சிறை அதிகாரிகள் என்று டிஐஜி ரூபா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா பயன்படுத்துவதற்கென தனியாக 150 அடி பரப்பளவு இடத்தை பேரிகார்டர்' வைத்து ஒதுக்கீடு செய்திருந்தனர் சிறை அதிகாரிகள் என்று முன்னாள் பெங்களூரு மத்திய சிறைச்சாலை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்புச் சலுகைகள் அனுபவித்தார் அதன் தான் நேரிலேயே கண்டேன் என்று டிஐஜி ரூபா உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசாக இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

அது தெடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், சசிகலா, வெளியே சென்றுவிட்டு மெயின் கேட் வழியாக மீண்டும் சிறைக்கு திரும்பும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆதாரங்களையும் சேர்த்து, மொத்தம் 74 ஆதாரங்களை கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.

ஊழல் தடுப்பு பிரிவில்...

ஊழல் தடுப்பு பிரிவில்...

மேலும் கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையில் ரூபா அளித்துள்ள விளக்கத்தில் , சிறை வளாகத்தில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அதில், மிகவும் முக்கியமாக, சிறை வளாகத்தில் 5 அறைகள் அடங்கிய பகுதியை, பேரிகார்டர் வைத்து அதிகாரிகள் ஒதுக்கி இருந்தனர். அதை நேரில் பார்த்தேன்.

சொகுசு வாழ்க்கை

சொகுசு வாழ்க்கை

அந்தப்பபகுதி மொத்தம் 120 அடி முதல் 150 அடி வரை இருக்கும். அந்தப்பகுதிகளில்தான் சசிகலா சொகுசாக வாழ்ந்துள்ளார். சமையல் பாத்திரங்கள், எலக்ட்ரிக் அடுப்பு, புதிய எல் ஈ டி டிவி உள்ளிட்ட நவீன வசதிகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.

Recommended Video

    Special kitchen functioning for V Sasikala inside prison-Oneindia Tamil
    பணத்துக்காக...

    பணத்துக்காக...

    இவை அனைத்தும் பணத்துக்காகவே அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளன. இவை குறித்தும் முழுமையாக விசாரணை நடத்தவேண்டும் என்று ரூபா குறிப்பிட்டிருந்தார்.

    சசிகலாவும் இளவரசியும் சீருடை அணிவதில்லை

    சசிகலாவும் இளவரசியும் சீருடை அணிவதில்லை

    மேலும் அவர், ' கர்நாடக சிறைக் கைதிகள் வெள்ளை சீருடை அணிவதாகக் கூறியுள்ள ரூபா, சசிகலாவும் இளவரசியும் சீருடை அணிவதில்லை' என்றும் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+