ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வரின் மனைவி கொரோனாவுக்கு உயிரிழப்பு!
சிம்லா: ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வர் சாந்தகுமாரின் மனைவி சந்தோஷ் ஷைல்சா கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலையில் உயிரிழந்தார் என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சைசல் தெரிவித்தார்.
காங்க்ரா மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ஷைல்சாவின் உயிர் பிரிந்தது. முன்னாள் முதல்வர் சாந்த குமார் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் சாந்தகுமார். இவரது மனைவி சந்தோஷ் ஷைல்சா. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தகுமார் உடல்நல குறைவு காரணமாக, காங்க்ரா மாவட்டம் தாண்டாவில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் சந்தோஷ் ஷைல்சாவுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சந்தோஷ் ஷைல்சா, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சைசல் சந்தோஷ் ஷைல்சாவின் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். சாந்தகுமாரின்குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் அவரது தனிப்பட்ட செயலாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் டிரைவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications