மால்டா தீவில் பதுங்கிய லலித் மோடி... விரைவில் 'தூக்குகிறது' இண்டர்போல்
டெல்லி: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி மால்டா தீவுகளில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச போலீசான இண்டர்போல் விரைவில் லலித் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.பி.எல் தலைவராக இருந்த லலித் மோடி பல்வேறு நிதிமுறை கேட்டில் ஈடுபட்டார் என்பது புகார். இதை தொடர்ந்து 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

நிதிமுறைகேடு தொடர்பாக லலித்மோடிக்கு எதிராக கிரிக்கெட் வாரியம் போலீசில் புகார் கொடுத்தது. முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமலாக்கப்பிரிவு அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதை தொடர்ந்து லலித்மோடி இந்தியாவில் இருந்து தலைமறைவாகி லண்டனில் தஞ்சம் புகுந்தார்.
வரி ஏய்ப்பு, பணபரி வர்த்தனை மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது இருந்தன. லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் மந்திரி வசுந்தரா ராஜே ஆகியோர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் லலித்மோடி மீதான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.
லலித்மோடியை கைது செய்ய ஏதுவாக இண்டர்போல் மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்கான ஆவணங்கள் இண்டர்போலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இத்தாலிக்கும் ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் இடையே உள்ள மால்டா தீவுகளில் லலித் மோடி பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இண்டர்போல் அதிகாரிகள் லலித் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கக் கூடும் என கூறப்படுகிறது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications