மால்டா தீவில் பதுங்கிய லலித் மோடி... விரைவில் 'தூக்குகிறது' இண்டர்போல்
டெல்லி: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி மால்டா தீவுகளில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச போலீசான இண்டர்போல் விரைவில் லலித் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.பி.எல் தலைவராக இருந்த லலித் மோடி பல்வேறு நிதிமுறை கேட்டில் ஈடுபட்டார் என்பது புகார். இதை தொடர்ந்து 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

நிதிமுறைகேடு தொடர்பாக லலித்மோடிக்கு எதிராக கிரிக்கெட் வாரியம் போலீசில் புகார் கொடுத்தது. முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமலாக்கப்பிரிவு அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதை தொடர்ந்து லலித்மோடி இந்தியாவில் இருந்து தலைமறைவாகி லண்டனில் தஞ்சம் புகுந்தார்.
வரி ஏய்ப்பு, பணபரி வர்த்தனை மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது இருந்தன. லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் மந்திரி வசுந்தரா ராஜே ஆகியோர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் லலித்மோடி மீதான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.
லலித்மோடியை கைது செய்ய ஏதுவாக இண்டர்போல் மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்கான ஆவணங்கள் இண்டர்போலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இத்தாலிக்கும் ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் இடையே உள்ள மால்டா தீவுகளில் லலித் மோடி பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இண்டர்போல் அதிகாரிகள் லலித் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கக் கூடும் என கூறப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications