இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சி.கே.பிரசாத் நியமனம்
டெல்லி: இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.பிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பதவி வகித்து வந்தார். அவருடைய 3 ஆண்டு பதவி காலம் முடிவு அடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி சி.கே.பிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கட்ஜூ தமது பதவி காலத்தில் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தவர். 2004-2005ஆம் ஆண்டு தாம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில், ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்திலோ அல்லது நீதித்துறையின் நேர்மையான, சுதந்திரமான செயல்பாடுகளிலோ ஒரு போதும் தலையிட்டதில்லை; நீதிபதிகள் நியமன விவகாரத்தில் யார் பெயரையும் பரிந்துரை செய்ததில்லை; நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஜெயலலிதா மிகவும் மதிப்பளித்தார் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளான நீதிபதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் அந்த நீதிபதிக்கு தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரின் ஆதரவு இருந்ததாகவும் ஒரு சர்ச்சையை கிளப்பியிருந்தார் கட்ஜூ. இதில் திமுக தலைவர் கருணாநிதிக்கும் கட்ஜூக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது.
அதேபோல் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் புதிய சர்ச்சையை கிளப்பியிருந்தார். முன்னதாக நாட்டின், 90 சதவீத இந்தியர்கள், முட்டாள்கள். மதத்தின் பெயரால் அவர்களை, சமூக விரோத சக்திகள் எளிதில் ஏமாற்றி விடுகின்றன என்று "பகுத்தறிவு" பிரசாரம் செய்யப் போய் அதுவும் சர்ச்சையில் சிக்கியது. இப்படி பல சர்ச்சைகளின் சங்கமமாக இருந்தவர் கட்ஜூ. தற்போது கட்ஜூ ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக சி.கே. பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னா நகரில் பிறந்தவரான சி.கே.பிரசாத், 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந்தேதி முதல், இந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 4 ஆண்டுகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர்.
சி.கே. பிரசாத்தை துணை ஜனாதிபதி அமீது அன்சாரி தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட குழு தேர்வு செய்து அண்மையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பிரஸ் கவுன்சில் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பிரசாத்தை நியமித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications