பாஜகவில் இணைந்தார் 'ஆம் ஆத்மி' கிரண் பேடி: கேஜ்ரிவாலுக்கு எதிராக முதல்வர் வேட்பாளராகிறார்!
டெல்லி: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி பாஜகவில் இணைந்துள்ளார். அவர் வரும் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார்.
ஊழலுக்கு எதிரான ஜனலோக்பால் மசோதா வேண்டி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக இருந்து வந்தவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி. இந்நிலையில் அவர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ஹர்ஷ்வர்தன், டெல்லி பாஜக தலைவர் சதிஷ் உபத்யாய, எம்.பி. விஜய் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜகவில் சேர்ந்துள்ள கிரண் பேடி டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆனால் பாஜக அவரை முதல்வர் வேட்பாளராக்கி ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு சவால் விடுக்கும் என்று தெரிகிறது.
கிரண் பேடியின் வரவு கட்சிக்கு பலம் அளிக்கும் என்றும், அவரை முதல்வர் வேட்பாளர் ஆக்குவது பற்றி கட்சியின் நாடாளுமன்ற குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
இது குறித்து கிரண் பேடி கூறுகையில்,
நான் பிரதமர் மோடியின் அருமையான தலைமை குணத்தை பார்த்து தான் பாஜகவில் இணைந்துள்ளேன். டெல்லிக்கு சக்திவாய்ந்த, ஸ்திரத்தன்மை கொண்ட அரசு தேவை. நான் டெல்லியின் நலனுக்காக பாடுபடுவேன். இதற்காக பாஜக எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications