காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் 4 பெண்கள் பலாத்காரம்: தடுக்க முயன்றவர் சுட்டுக்கொலை!
உத்தரப்பிரதேசத்தில் காரை வழிமறித்து 4 பெண்களை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா: உத்தரப்பிரதேசத்தில் காரை வழிமறித்து 4 பெண்களை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற ஒரு நபரையும் அவர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா ஜேவர் என்ற இடத்திலிருந்து 4 பெண்கள் உள்பட 8 பேர் ஒருகாரில் புலந்த்சாகர் நகருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அதிகாலை 1.30 மணியளவில் ஜேவர் பகுதியில் உள்ள சாபோடேஜ் என்ற கிராமம் வழியாக அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் கையில் கத்திய, இரும்புக்கம்பி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரை வழிமறித்தனர்.

4 பெண்கள் பலாத்காரம்
பின்னர் காரில் இருந்தவர்களை மிரட்டும் வகையில் துப்பாகியால் சுட்டுள்ளனர், இதைத்தொடர்ந்து அந்த காரில் இருந்த 4 பெண்களையும் வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்த அவர்கள், 4 பேரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தடுக்க முயன்றவர் கொலை
இதனை தடுக்க முயன்ற ஒருவரையும் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. பின்னர் காரில் வந்தவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தையும் அந்தக் கும்பல் பறித்துச்சென்றது.

பெண்களுக்கு மருத்துவ சோதனை
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கபட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே நடந்த சம்பவம்
காரில் சென்ற பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் புலந்த்சாகர் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காரில் சென்ற கணவரை சுட்டுக்கொன்று மனைவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications