Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திராவிட மாடலில் யோகி அரசு. . பெண்களுக்கு இலவச பஸ் பயணம். . ஆனால் 48 மணிநேரத்திற்கு மட்டுமே

Subscribe to Oneindia Tamil

போபால்: சென்னையில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவைகள் அளித்து வரும் நிலையில், இதை பின்பற்றும் வகையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை 2 நாட்களுக்கு அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

சகோதர சகோதரிகளின் பாசத்தை வெளிக்காட்டக்கூடிய இந்த பண்டிகை வட மாநிலங்களில் மிகவும் பிரபலம்.

 ரக்‌ஷா பந்தன் பண்டிகை

ரக்‌ஷா பந்தன் பண்டிகை

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரக்‌ஷா பந்தன் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையையொட்டி, சகோதரர்கள் தனது சகோதரிகளுக்கு பாசத்தை வெளிக்காட்டுவதற்காக கயிறு கட்டுவர். மேலும் சர்பிரைசாக பரிசுகளை கொடுத்து அசத்துவார்கள். அதாவது தான் மஞ்சள் கயிறு கட்டும் சகோதரிக்கு நான் எப்போது பாதுகாப்பாளராக இருப்பதாக உறுதிகொள்ளும் நிகழ்வு தான் ரக்‌ஷா பந்தனர்.

 பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் பாதுகாப்பு

இந்த நிலையில் ரக்‌ஷா பந்தனையொட்டி தற்போதைய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அலுவலகம் அனைவருக்கும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தது. அந்த பதிவில், ''அனைவருக்கும் ரக்‌ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள். சகோதர-சகோதரிகளுக்கிடையேயான அன்பு மற்றும் மரியாதையின் சிறப்பான மற்றும் ஆழமான பாசப் பிணைப்பின் கொண்டாட்டமாகும். இந்த புனிதமான நாளில், பெண்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவும் நான் அனைவரும் உறுதிகொள்வோம்'' பதிவிட்டுள்ளார்.

 2 நாள் இலவச பயணம்

2 நாள் இலவச பயணம்

இந்த நிலையில், துணை குடியரசு தலைவரின் பெண்கள் பாதுகாப்பு குறித்த பதிவினை நிறைவேற்றவும், ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டியும், 'ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவா' என்ற 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்கள் பயணத்தை உறுதி செய்யும் வகையில் ஆகஸ்டு 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 2 நாட்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது ஆகஸ்டு 10-ந்தேதி இரவு 10 மணி முதல் 12- ந் தேதி வரை 48 மணி நேரத்துக்கு பெண்களுக்கு பஸ்களில் கட்டணம் கிடையாது, இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

 திராவிட மாடலை போல. .

திராவிட மாடலை போல. .

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த 2 நாட்களுக்கு இந்த சேவையை அறிவித்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்த இந்த திட்டத்தை யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தில் பின்பற்றியுள்ளது திராவிட மாடலை காப்பியடிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில பஸ்களில் பயணிக்க பெண்களுக்கு கட்டணமில்லை என்று அறிவிப்பு வெளியாகி நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னையில் இந்த பஸ்களை பெண்கள் எளிதில் அடையாளம் காணும் விதமாக புதிதாக பிங்க் நிற பஸ்களை உதய நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+