இடஒதுக்கீடு கோரி பந்த்: குஜராத்தில் வெடித்த கலவரத்தில் 3 பேர் சாவு- ராணுவம் வரவழைப்பு!!
அகமதாபாத்: குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் அம்மாநிலம் முடங்கிப் போயுள்ளது. பல நகரங்களில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஹர்திக் படேல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அம் மாநிலம் முழுவதும் இன்று பந்த் நடைபெற்றது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகமதாபாத், சூரத், மேஷனா, விஸ்நகர், உஞ்சா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை சம்பவங்கள் வெடித்ததையடுத்து குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை மேற்கொண்டார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை மத்திய அரசு அனுப்பும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்ததாக முதல்வர் ஆனந்திபென் தெரிவித்தார்.
இந்த பந்த் காரணமாக அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சந்தைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. பந்த் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சூரத் நகரில்நடந்த வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் அமைதிகாக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications