கனமழை.. கரை புரண்டோடும் வெள்ளம்.. எல்லாம் இந்த ரெண்டு தவளைங்கனால தான்.. டைவர்ஸ் பண்ணி வைத்த மக்கள்!
Recommended Video
போபால்: கொட்டித்தீர்க்கும் கனமழையை நிறுத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்த வியக்க வைக்கும் சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
வெயில் அடிக்கும் போது மழை பெய்தால், காக்கைக்கும் நரிக்கும் திருமணம் நடக்கிறது, கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என ஏகப்பட்ட மூட நம்பிக்கைகள் இன்னமும் நம்மூரில் நிலவுகிறது.
ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்து வைத்து, பிறகு அவற்றிக்கு விவாகரத்தும் செய்து வைத்துள்ளார்கள் மத்தியப்பிரதேசத்தில். கொட்டித் தீர்க்கும் மழையை நிறுத்தவே இந்த ஏற்பாடாம்.

ஆடம்பர திருமணம்
இதன் முன்கதை ஓராண்டுக்கு முந்தையது. மத்தியப்பிரதேசத்தின் பல ஊர்களில் கடந்தாண்டு இறுதியில் மழை பெய்ய வேண்டி ஆஷாத் உத்ஷவ் என்ற பெயரில் தவளைகளுக்கு திருமணம் செய்யும் சடங்கு நடந்தது. இந்த சடங்கில் அம்மாநில அமைச்சர் மற்றும் பாஜக பிரமுகர்கள் கலந்துகொண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

கூடுதல் மழை
இதையடுத்து தற்போது மத்தியப்பிரதேசத்தில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. வழக்கத்தைவிட 26 சதவீதம் அதிகமாக மழை செய்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அணைகள் அனைத்து நிரம்பி வழிகின்றன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தவளை தான் காரணம்
இந்த பெருமழைக்கு காரணம், கடந்தாண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்ததே என நம்புகிறார்கள் அந்த ஊர் மக்கள். இதையடுத்து தவளைகளுக்கு விவகாரத்து செய்து வைத்தால் மழை குறையும் என நம்பி, தவளைகளுக்கு விவகாரத்து செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பொம்மை விவாகரத்து
ஆனால் தவளைகள் கிடைக்காததால், இரண்டு பொம்மை தவளைகளை வைத்து விவாகரத்து செய்தனர் சில அமைப்பினர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, பிறகு விவாகரத்து செய்து வைப்பது எல்லாம் எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை என கிண்டலடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications