மார்ச் 13ம் தேதி முதல் சேமிப்பு வங்கி கணக்குகளில் நிபந்தனையின்றி பணம் எடுக்கலாம் : ரிசர்வ் வங்கி
சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் மார்ச் 13ஆம் தேதி முதல் நிபந்தனையின்றி பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டெல்லி: வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மார்ச் 13ஆம் தேதி முதல் எந்த நிபந்தனையும் இன்றி பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இம்மாதம் 20 ஆம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்துக்கு 50000 ரூபாய் பணம் எடுக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு ரத்து நடவடிக்கையை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து வங்கிகளில் பணம் எடுக்கவும் டெப்பாசிட் செய்யவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பணமதிப்பு ரத்து நடவடிக்கை நடைமுறைக்கு வந்து 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி மார்ச் 13ஆம் தேதிக்குப் பிறகு சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் எந்த நிபந்தனையும் இன்றி வங்கிகளில் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் எடுக்கும் தொகையின் உச்சவரம்பையும் ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. அதன்படி வரும் 20ஆம் தேதி முதல் வாரத்துக்கு 50000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கிஅறிவித்துள்ளது.
தற்போது வரை வாரத்துக்கு 24000 ரூபாய் எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது.
-
500 ரூபாய் நோட்டுகளுக்கு புதிய சிக்கல்? ஏடிஎம்களில் இனி 700 ரூபாய் தான் புழக்கத்திற்கு வருகிறதா -
உங்கள் வீட்டு லோன் இஎம்ஐ குறையுமா? ரிசர்வ் வங்கி முடிவு என்ன.. கீதா கோபிநாத் பேட்டி -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications