கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படாது– மத்திய அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பட்ஜெட்டிற்குப் பின்பாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த உயர்வும் இருக்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுபற்றி கூறிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்துவது பற்றிய எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மானிய சுமைகளைக் குறைக்கவும், நிதி நிலைமையின் வீழ்ச்சியைச் சீர் படுத்தவும் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

Gas cylinder, kerosene hikes not possible – central Gov…

இந்நிலையில் நிதிச்சுமையைக் குறைப்பதற்காக கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் ரூபாய்5ம், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 50 காசுகளும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின.

இத்திட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதன் பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர், கேஸ் சிலிண்டர், கெரசின் விலைகள்உயர்த்தப்படாது என்று தெரிவித்தார். இதன் மூலம் மக்களிடம் இருந்து வர இருந்த எதிர்ப்பு அலைகளை நிறுத்தி உள்ளது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+