ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மீண்டும் சந்தித்த ஜி.கே.வாசன்! காவிரி பிரச்சனையில் தலையிட வலியுறுத்தல்!!

காவிரி பிரச்சனையில் தலையிட கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஜி.கே.வாசன் நேற்று இரவு சந்தித்து வலியுறுத்தினார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மீண்டும் சந்தித்து பேசினார். காவிரி பிரச்சனையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலையிடக் கோரி சந்தித்ததாக வாசன் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் பிரணாப் முகர்ஜியை நேற்று இரவு ஜி.கே.வாசன் சந்தித்தார். இச்சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.

GK Vasan meets President Pranab Mukherjee

இச்சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், காவிரி பிரச்சனையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். காவிரி டெல்ட மாவட்டங்களில் உயிரிழந்து வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு நட்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

மேலும் தமிழக மீனவர்கள் உரிமை பாதுகாக்கப்பட இலங்கை அரசுக்கு மத்திய அரசு உரிய அழுத்தத்தை தர நடவடிக்கை தேவை என்றும் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டேன்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

GK Vasan meets President Pranab Mukherjee

காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேருவதற்கு முயற்சித்த போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசியிருந்தார். தற்போது மீண்டும் ஜனாதிபதியை வாசன் சந்தித்ததில் வேறு அரசியல் காரணங்கள் பின்னணியில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+