கோவா முதல்வராக பாரிக்கர் பதவியேற்கலாம்.. தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் அவர் திட்டமிட்டபடி இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பதில் சிக்கல் ஏதும் இல்லை.
டெல்லி : கோவா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னரே ஆட்சியமைக்க முடியும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளபோதிலும், முதல்வராக மனோகர் பாரிக்கர் இன்று பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் இன்று மாலை 5 மணிக்கு பாரிக்கர் பதவியேற்பதில் சிக்கல் ஏதும் இல்லை.
கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியானது. அதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றுள்ளன. இதனால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. 40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க 22 பேரின் ஆதரவு தேவை.

இதற்காக கோவா முன்னணிக் கட்சி, எம்ஜிபி கட்சி, சுயேச்சைகள் ஆகியோரை தங்கள் வசம் இழுத்து அவர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் முயற்சித்தன. இதில் பாஜக வென்றது.
இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் முதல்வராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவா சட்டசபை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் குழு தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான பெஞ்ச், கோவா சட்டசபையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும், அதில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதேவேளையில், மனோகர் பாரிக்கர் முதல்வராக இன்று பதவியேற்பதற்கு தடை விதிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications