ரெஸ்டாரண்டுகளில் உணவு அளவை குறைக்க மத்திய அரசு முடிவு! ஏன் தெரியுமா?
டெல்லி: ஹோட்டல்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் அளவை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். எனவே அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைப்படிதான் இனிமேல் ஹோட்டலில் சாப்பாடு வழங்கப்படும்.
உணவு வீணாதல் ஒரு பெரும் சமூக கொடுமை என மன்கிபாத் வானொலி உரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி பேசிய நிலையில், அரசு உடனடியாக அதை தடுக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாம்.

இதுபற்றி நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை தெளிவுபடுத்தியுள்ளார்.
"ஒருவர் 2 இரால்தான் சாப்பிட முடிகிறது என்றால், அவருக்கு ஒரு பிளேட்டில் 6 இரால் வைப்பது தேவையற்றது. 2 இட்லிதான் சாப்பிடும் ஒருவருக்கு 4 இட்லி வைப்பதற்கான தேவையில்லை. சாப்பிட முடியாத பண்டம் வீணாக குப்பைக்கு போகிறது. மேலும், சாப்பிடாத பொருளுக்கும் சேர்த்து கஸ்மர்கள் பணம் செலுத்த வேண்டியுள்ளது" என்கிறார் ராம்விலாஸ் பாஸ்வான்.
நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் ஒரு கேள்வி பட்டியலை தயாரித்து வருகிறதாம். இந்த பட்டியல் ரெஸ்டாரண்ட் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில், ஒரு வாடிக்கையாளர் எவ்வளவு சாப்பாட்டை சாப்பிட முடியும் என்பது போன்ற கேள்விகள் இருக்கும். இதற்கு கிடைக்கும் பதிலை வைத்து சராசரி உணவு அளவு நிர்ணயிக்கப்படுமாம். அதேநேரம், சாதாரண ஓட்டல்களில் கட்டுப்பாடு இல்லை என்கிறது அரசு.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications