பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் பெண் ஊழியருக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு: மத்திய அரசு
டெல்லி: பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாகும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அப்படி அளிக்கப்படும் விடுமுறை அந்த பெண் ஊழியரின் ஆண்டு விடுமுறை கணக்கில் இருந்து கழிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. சிறுமிகளும் கணிசமான அளவில் பலாத்காரத்துக்குள்ளாகின்ற கொடுமை நடைபெறுகிறது.

இதுபோன்ற சூழலில் பாதிக்கப்படும் பெண்கள் மன உளைச்சல் அடைந்து சில நேரங்களில் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர்.
வேலைக்குச் செல்லும் பெண்கள், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டால், அவர்களது நிலைமை பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுகிறது. இந்த நிலையை மாற்ற, மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
இதன்படி பணிக்குச் செல்லும் பெண்கள், பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 3 மாத விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
அப்படி அளிக்கப்படும் விடுமுறை அந்த பெண் ஊழியரின் ஆண்டு விடுமுறை கணக்கில் இருந்து கழிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications