மத உணர்வுகளைத் தூண்டினால் உடனே முடக்குவோம்- 40 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு
டெல்லி: மத வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் வகையில் கருத்துகளை வெளியிட்ட சுமார் 40 இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் ஈராக், சிரியாவில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், அந்த அமைப்புக்கு இந்தியாவில் ஆள் சேர்க்கும் வகையிலும் இணையதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதேபோல், மியான்மர் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் அமெரிக்க கூட்டணிப் படைகளுக்கு எதிராகப் போரிடுவோர் குறித்த விடியோ காட்சிகளும் இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன.

இதுபோன்ற தகவல்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு கருதுகிறது. எனவே, சிறுபான்மையினர் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்ட இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக 2009ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் இணையதள வசதிகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதியன்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அந்நிறுவனங்கள் அனைத்தும் அத்தகைய இணையதளங்களை முடக்கிவிட்டன.
எனினும், சில இணையதளங்கள் இன்னும் இயங்கி வருகின்றன. ஆனால், அந்த இணையதளங்களை முழுமையாக முடக்க இயலாது என்றும், அந்த இணையதளங்கள் பாதுகாக்கப்பட்ட இணையதள நெறிமுறைகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த மற்றொரு உத்தரவில், மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் இருக்கும் கணக்குகள், அதில் வெளியிடப்பட்ட தகவல்களை உடனடியாக முடக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது. விடியோக்களை பகிரும் தளங்களுக்கும் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
இதேபோல், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக 32 இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் உத்தரவு பிறப்பித்திருந்தது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, பல இணையதளங்கள் முடக்கப்பட்டன. அதில், விடியோவைப் பகிரும் பிரபல இணையதளங்களும் அடங்கும். ஆனால், சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கிய பிறகு, முடக்கப்பட்ட இணையதளங்களில் சிலவற்றுக்கு மட்டும் மீண்டும் அனுமதியளிக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications