மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், கோவா ஆளுநர்கள் இன்று அறிவிப்பு?
டெல்லி: மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் கோவா மாநிலங்களுக்கு நியமிக்கப்படும் புதிய ஆளுநர்கள் யார் என்பதை மத்திய அரசு இன்று அறிவிக்ககக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் மோடி அரசு பதவி ஏற்ற நிலையில் பி.எல் ஜோஷி (உத்தரப் பிரதேசம்), சேகர்தத் (சத்தீஸ்கர்), அஸ்வினி குமார் (நாகலாந்து), எம்.கே நாராயணன்(மேற்கு வங்காளம்), பிவி வான்சூ (கோவா). வைக்கம் புருஷோத்தமன் (மிசோரம்) ஆகிய ஆறு மாநில ஆளுநர்கள் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்களில் எம்.கே.நாராயணன், வான்சூ இருவரும் ஹெலிகாப்டர் ஊழல் விசாரணையால் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இருந்தூ மிசோராம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் தமது ஆளுநர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார் சங்கர நாராயணன்.
இதனிடையே பதவி விலக மறுத்த கேரள ஆளுநர் ஷீலா தீட்சீத் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். இந்நிலையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் கோவா மாநிலங்களின் புதிய ஆளுநர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பட்டியலில் பாஜக மூத்த தலைவர் கல்யாண்சிங் பெயரும் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications