உயிருக்கு கேடு விளைவிக்கும்.. சாரிடான் உட்பட 6000 மாத்திரைகளை தடை செய்த அரசு!
இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மொத்தமாக 6000க்கும் அதிகமான மாத்திரைகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் இன்று தடை விதித்துள்ளது.
டெல்லி: இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மொத்தமாக 6000க்கும் அதிகமான மாத்திரைகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் இன்று தடை விதித்துள்ளது.
இன்று காலையில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதில் தலைவலி, சளிக்கு பயன்படுத்தும் சாதாரண மாத்திரைகள் கூட உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
மாத்திரைகள் தடை செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் மேலும் சில மாத்திரைகள் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

தடை
பிக்ஸ்ட் -டோஸ் காம்பினேஷன் ( fixed-dose combination-FDC) என்று மருத்துவ துறையில் ஒரு வாக்கியம் உள்ளது. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மருத்துவ பொருட்களை கலந்து உருவாக்கப்படும் மாத்திரைகள் எல்லாம் இந்த வகைக்குள் வரும். இந்த நிலையில் இதில் உள்ள 328 வகை கலவையில் உருவாக்கப்பட்ட மாத்திரை உற்பத்திக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

எத்தனை மாத்திரை
இதனால் நிறைய மாத்திரை உற்பத்திகள் மொத்தமாக நிறுத்தப்படும். இதனால் 6000க்கும் அதிகமான மாத்திரை பிராண்டுகள் மொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளது. சேரிடான், டாக்சிம் ஏஇசட், பண்டர்ம் பிளஸ் கிரீம் உள்ளிட்ட பிரபலமான மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது. சாதாரண தலைவலி, காய்ச்சல் மாத்திரைகள் கூட தடை செய்யப்பட்டுள்ளது.

விளக்கம்
இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த 328 வகை மாத்திரை உற்பத்தி கலவைகளும் மிகவும் தவறான முறையில் உருவாக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மனிதர்களின் உடலுக்கு நிறைய பிரச்சனை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத்திரைகளை உயிருக்கு கேடு விளைவிக்கும் மாத்திரைகள் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இன்னும் நீக்க வாய்ப்புள்ளது
இன்று காலையில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதனால் இதை உருவாக்கவோ, பயன்படுத்தவோ, சோதனை செய்யவோ கூடாது. இன்னும் சில நாட்களில் மேலும் சில மாத்திரைகள் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications