உயிருக்கு கேடு விளைவிக்கும்.. சாரிடான் உட்பட 6000 மாத்திரைகளை தடை செய்த அரசு!
இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மொத்தமாக 6000க்கும் அதிகமான மாத்திரைகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் இன்று தடை விதித்துள்ளது.
டெல்லி: இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மொத்தமாக 6000க்கும் அதிகமான மாத்திரைகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் இன்று தடை விதித்துள்ளது.
இன்று காலையில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதில் தலைவலி, சளிக்கு பயன்படுத்தும் சாதாரண மாத்திரைகள் கூட உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
மாத்திரைகள் தடை செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் மேலும் சில மாத்திரைகள் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

தடை
பிக்ஸ்ட் -டோஸ் காம்பினேஷன் ( fixed-dose combination-FDC) என்று மருத்துவ துறையில் ஒரு வாக்கியம் உள்ளது. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மருத்துவ பொருட்களை கலந்து உருவாக்கப்படும் மாத்திரைகள் எல்லாம் இந்த வகைக்குள் வரும். இந்த நிலையில் இதில் உள்ள 328 வகை கலவையில் உருவாக்கப்பட்ட மாத்திரை உற்பத்திக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

எத்தனை மாத்திரை
இதனால் நிறைய மாத்திரை உற்பத்திகள் மொத்தமாக நிறுத்தப்படும். இதனால் 6000க்கும் அதிகமான மாத்திரை பிராண்டுகள் மொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளது. சேரிடான், டாக்சிம் ஏஇசட், பண்டர்ம் பிளஸ் கிரீம் உள்ளிட்ட பிரபலமான மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது. சாதாரண தலைவலி, காய்ச்சல் மாத்திரைகள் கூட தடை செய்யப்பட்டுள்ளது.

விளக்கம்
இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த 328 வகை மாத்திரை உற்பத்தி கலவைகளும் மிகவும் தவறான முறையில் உருவாக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மனிதர்களின் உடலுக்கு நிறைய பிரச்சனை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத்திரைகளை உயிருக்கு கேடு விளைவிக்கும் மாத்திரைகள் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இன்னும் நீக்க வாய்ப்புள்ளது
இன்று காலையில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதனால் இதை உருவாக்கவோ, பயன்படுத்தவோ, சோதனை செய்யவோ கூடாது. இன்னும் சில நாட்களில் மேலும் சில மாத்திரைகள் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications