5 கிலோ கியாஸ் சிலிண்டர்களை ஷாப்பிங் மால், குடிசை பகுதிகளில் விற்க முடிவு

Subscribe to Oneindia Tamil

Govt plans to sell 5-kg LPG cylinders in malls, slums
டெல்லி: 5 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரை இனி ஷாப்பிங் மால்கள், குடிசைப் பகுதிகளிலும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் புதிய திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி மத்திய அரசு அமல்படுத்தியது.

இந்திய எண்ணை நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பெட்ரோல் பங்குகளில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர்கள் நாடெங்கும் நல்ல ஆதரவை பெற்றுள்ளது. குறிப்பாக மாணவர்கள், ஐ.டி. மற்றும் பி.பி.ஓ.க்களில் பணி புரிபவர்களுக்கு 5 கிலோ கியாஸ் திட்டம் மிகவும் உதவியாக உள்ளது. அதோடு சமீப காலமாக 5 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கான தேவை அதிகரித்து வருகிறது.

டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் காரணமாக தற்போதுதான் 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் விற்பனை தொடங்கி உள்ளது.

இதற்கிடையே 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக பெட்ரோலியம் அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த திட்டத்தின்படி ஷாப்பிங் மால்களிலும் 5 கிலோ சிலிண்டர் விற்பனை நடைமுறைக்கு வர உள்ளது.

மேலும் குடிசைப் பகுதிகளிலும் 5 கிலோ சமையல் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன்மூலம் குடிசைப்பகுதி மக்கள் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வாங்குவதை கட்டுப்படுத்த முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+