ஜார்க்கண்ட்டில் தேர்தலுக்குப் பின்னர் "கூட்டணி" ஆட்சி: லாலு கருத்து
ஹூசைனாபாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் மெகா கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்துப் போட்டியிடுகிறது, காங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

முதல் கட்ட தேர்தல் நவம்பர் 25-ந் தேதியன்று 13 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இவை அனைத்துமே மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைய பகுதியாகும். இந்த தொகுதிகளில் தற்போது தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பலாமோவ் மாவட்டத்தில் ஹூசைனாபாத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் லாலு பிரசாத் யாதவ். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தலுக்குப் பின்னர் பீகாரில் இருப்பதைப் போல மெகா கூட்டணி ஆட்சிதான் அமையும். என்று கூறினார்.
இதனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்த ஒரு கூட்டணி அரசு ஜார்க்கண்ட்டில் அமைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications