பர்ஸ்ட் நைட் காட்சி வீடியோவை ரிலீஸ் செய்த கொடுமை.. மாமியார் வீட்டில் கம்பி எண்ணும் மாப்பிள்ளை
ஆந்திராவில் முதலிரவு காட்சிகளை அப்படியே வீடியோவாக எடுத்து வெளியிட்ட நபர் கைது
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட நபர் தனது முதலிரவு காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து அவர்களுக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி திருமணம் நடந்தது. அதன்பிறகு புதுமண தம்பதிக்கு பெண் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அந்த இளைஞர் தனது மனைவியுடன் உறவு கொண்ட காட்சிகளை அவருக்கே தெரியாமல் வீடியோ படமாக எடுத்துவிட்டதாக தெரிகிறது.

பர்ஸ்ட் நைட்
இதோடு தனது பர்ஸ்ட் நைட் வீடியோ என்ற பெயரில் அதை சமூகவலைதளத்திலும் வெளியிட்டாராம். இது பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், அந்த இளைஞரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். இது பெரிய வாக்குவாதத்தில் முடிந்தது.

பஞ்சாயத்தார்
மேலும் இந்த சம்பவத்தை ஊர் பஞ்சாயத்தார் பார்த்து அவர்களை சமாதானம் செய்தனர். மேலும் அந்த இளைஞரையும் சரமாரி கேள்விகள் கேட்டனர். எனினும் பெண் வீட்டார் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவி
திருமணம் முடிந்த நபர் தனது மனைவி என்றும் பாராமல் அவருடன் உறவு கொண்ட காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த வீடியோவை போலீஸார் நீக்கிவிட்டனர். மேலும் அந்த இளைஞர் ஏற்கெனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பதை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம்
திருமணம் நிச்சயிக்கப்பட்டால் ப்ரீ வெட்டிங் சூட், வளைகாப்பு, ஹனிமூன் செல்லும் இடங்கள் உள்ளிட்டவை குறித்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் இந்த காலத்து இளைஞர்கள் எடுத்து வருகிறார்கள் என்றால் இது போன்று மிகவும் விபரீதமான செயல்களிலும் ஈடுபடுவது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. ரயில் முன்பு, ஓடும் வெள்ளம் முன்பு, ஓடும் ரயிலில் இருந்து என எத்தனையோ ஆபத்தான இடங்களில் இருந்து செல்பி எடுக்கும் மோகத்தால் சிக்கி தவிக்கும் இளைஞர்கள் இப்படி முதலிரவையும் வீடியோவாக எடுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications