கர்நாடகாவில் 5 தமிழக தொழிலாளர்கள் கொலையான பின்னணியில் கள்ளத்தொடர்பு?
சாம்ராஜ்நகர்: தமிழக தொழிலாளிகள் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளத்தொடர்பு விவகாரம் சம்மந்தப்பட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹராலே கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜேந்திரன், ராஜம்மாள், ரோஜா, காசி மற்றும் சிவம்மாள் ஆகிய தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்களை சக தொழிலாளர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் ரோஜா 11வயது சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனை பேரும், அவர்கள் தங்கியிருந்த குடிசை பகுதியில் வெட்டப்பட்டனர். இதில் ராஜேந்திரன், கரும்பு வெட்ட தொழிலாளர்களை சாம்ராஜ்நகருக்கு கூட்டி வந்து கூலியும் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

அப்போது, விதவை பெண் ஒருவருடன் ராஜேந்திரனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று, கூலி கொடுக்கும் தகராறு தொடர்பாக ராஜேந்திரனுடன், சக தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்தொடர்பு விவகாரமும் பேசப்பட்டது.

அனைத்து தொழிலாளர்களும் மது போதையில் இருந்துள்ளனர். எனவே இரு கும்பலாக பிரிந்து தங்களுக்குள் வெட்டியுள்ளனர். இதில் ஐந்து கொலைகள் நடந்துள்ளன. இத்தகவல்களை போலீசார் தெரிவித்தனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications