புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களிடையே கோஷ்டி மோதல் - அலுலககத்தை சூறையாடியதால் பதற்றம்
புதுச்சேரி : பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, துணைவேந்தருக்கு ஆதரவான மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்யக்கோரி கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஆதரவுடன் மாணவர்களின் ஒரு பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்ததால் சந்திரா கிருஷ்ணமூர்த்தி ஒரு வார விடுப்பில் சென்றுவிட்டார். இதையடுத்து மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் பட்டாசு வெடித்து, வெற்றி ஊர்வலம் நடத்தினர்.
மேலும் பல்கலைக்கழத்தின் நிர்வாகக் கட்டடத்தினை முற்றுகையிட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோர், பதிவாளர் பொறுப்பு வகிக்கும் பன்னீர்செல்வத்தையும் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், துணைவேந்தருக்கு ஆதரவான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆவேசம் அடைந்து நேற்று போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கியதோடு, அவர்களுக்கு ஆதரவளித்த பேராசிரியர்களின் அலுவலகங்கள் மற்றும் துறை அலுவலகங்கள், வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.
இதில் அலுவலகங்களின் கதவுகள், கண்ணாடி தடுப்புகள், மேசை, கார்கள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குதலில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தியதால், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிதறி ஓடினர். இதனால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது.
தொடர்ந்து பிரச்சினை நீரு பூத்த நெருப்பாக இருப்பதால், புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக வளாகம் பதற்றத்துடன் காணப்படுகிறது.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications