அவசர கதியில் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதா? ராகுல் கடும் தாக்கு
டெல்லி: ஜி.எஸ்.டி வரி அவசர கதியில் அமல்படுத்தப்படுவதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இரவு 11 மணிக்கு கூடுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. பாஜக கூட்டணிக் கட்சிகள் இதில் பங்கேற்க உள்ளன. ஆனால் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க. உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
இந்நிலையில், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவது குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் டிவிட்டரில், 'மிகப்பெரிய வரி சீர்திருத்தமான ஜி.எஸ்.டி.யை அவசர கதியில் அமல்படுத்தப்படுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. பா.ஜ.க. அரசு சுய விளம்பரத்துக்காகவே ஜி.எஸ்.டி.யை அரைவேக்காட்டுத்தனமாக அமல்படுத்துகிறது.
திறமையில்லாத அரசு மூலம் இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறை அமல் செய்யப்படுவது கவலையளிக்கிறது. கோடிக்கணக்கான சாதாரண மக்கள், சிறு வணிகர்கள், வர்த்தகர்களுக்கு சிரமம், பதற்றம் ஏற்படுத்தாத வகையில் ஜிஎஸ்டி அமல் செய்யப்பட வேண்டும்'' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications