நாடாளுமன்ற வளாகத்தில் ஜிஎஸ்டி கோலாகல அறிமுக விழா.. பிரணாப், மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு
இன்று இரவு நாடாளுமன்றத்தில் கோலாகலமாக ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்பிகள் பங்கேற்கின்றனர்.
டெல்லி: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி அறிமுக விழா நடைபெற்றது.
நீண்ட கால இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.
அறிமுகம்
இதை தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி கட்டாயம் அமலாகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.
நள்ளிரவு விழா
ஜிஎஸ்டியின் அறிமுக விழா நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடத்த பாஜக அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி தற்போது ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெற்றது.
தலைவர்கள் பங்கேற்பு
ஜிஎஸ்டி அறிமுக விழாவில் ஜனாதிபதி பிரணாப், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர்.
|
அழைப்பு
நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. பாஜக கூட்டணிக் கட்சிகள் இதில் பங்கேற்றன.