குஜராத் அட்டூழியம்- மாணவர் தேர்தலில் பேராசிரியர் முகத்தில் கறுப்பு மை வீசிய பாஜக மாணவர் அமைப்பு!
பேராசிரியர் முகத்தில் கறுப்பு மை வீசி பாஜக மாணவர் அமைப்பு அட்டூழியம்.
Recommended Video
கட்சி: குஜராத்தில் கல்லூரி மாணவர் தேர்தலில் தங்களுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி பேராசிரியர் ஒருவர் முகத்தில் கறுப்பு மை பூசி அவரை ஊர்வலமாக அழைத்து வந்து அட்டூழியம் செய்துள்ளனர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி நிர்வாகிகள்.
குஜராத்தின் கட்ச் பூஜ் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.கே.வி.கே. பல்கலைக் கழகத்தில் மாணவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தங்களது ஆதரவு மாணவர்கள் பலரது பெயரும் விடுபட்டிருக்கிறது.
இதற்கு காரணமே பேராசிரியர் கிரிரன் பாக்ஸிதான். அதனால்தான் அவரை கெரோ செய்யும் விதமாக முகத்தில் கறுப்பு மையை பூசி ஊர்வலமாக அழைத்து வந்தோம் என கூறியுள்ளார்.
இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள கட்ச் பல்கலைக் கழக துணைவேந்தர் சிபி ஜடேஜா, போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 20 பேர் மீது போலீசார் வழக்கு செய்துள்ளனர்.
Gujarat: ABVP students blackened face of the head of the science dept.(who is also heading an election related committee)earlier today,ahead of Kutch university senate elections in Bhuj.FIR registered against accused.Kutch University VC said,"We condemn this & demand an inquiry." pic.twitter.com/Kel2OTc5KV
— ANI (@ANI) June 26, 2018