குஜராத் தேர்தல் வேட்பாளர்களில்.. 330 பேர் கிரிமினல்கள்.. ஷாக் ரிப்போர்ட்.. எந்த கட்சி டாப் தெரியுமா?
காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 330 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இவர்களில் 192 பேர் மிகக் கொடூரமான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது.
இந்த கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்தக் கட்சி தெரியுமா? வேறு யாருமல்ல. அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தான்.

மொத்தம் 1,621 வேட்பாளர்கள்
ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் மொத்தம் 1,621 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி காணப்படுகிறது. பாஜக 182 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், ஆம் ஆத்மி 181 தொகுதிகளிலும், காங்கிரஸ் 179 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

330 பேர் கிரிமினல்கள் - டாப்பில் ஆம் ஆத்மி
இந்நிலையில், இந்த வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த 1621 வேட்பாளர்களில் 330 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் முதலிடத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளது. அதாவது, அக்கட்சி வேட்பாளர்களில் 61 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸில் 60 வேட்பாளர்கள், பாஜகவில் 32 வேட்பாளர்கள் கிரிமினல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் ஆவர்.

கொடூர கிரிமினல்கள்
இதனிடையே, இந்த கிரிமினல் வேட்பாளர்களிலேயே 192 பேர் கொடூரமான குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருக்கின்றனர். கொலை, கொலை முயற்சி, பலாத்காரம், ஆள் கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இந்த பட்டியலின் கீழ் வருவார்கள். இந்தப் பட்டியலிலும் ஆம் ஆத்மியே முதலிடம் பிடித்திருக்கிறது. அக்கட்சியை சேர்ந்த 43 வேட்பாளர்கள் கொடூர குற்றங்களை புரிந்தவர்கள் ஆவர். இதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸில் 28 வேட்பாளர்களும், பாஜகவில் 25 வேட்பாளர்களும் கொடூரமான கிரிமினல் வழக்குகளை கொண்டவர்களாக உள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது
இந்நிலையில், இந்த கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்த ஜனநாய சீர்திருத்தங்களுக்கான சங்கம் இதுகுறித்து கூறுகையில், "2020-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவிட்டது. அதில், அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்யக்கூடாது எனக் கூறியிருந்தது. அப்படி கிரிமினல் பின்னணி கொண்டவர்களை தேர்வு செய்தால், அதற்கு உரிய விளக்கத்தை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை எந்தக் கட்சியும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இந்த உத்தரவை தொடர்ந்து நடைபெற்ற ஏராளமான தேர்தல்களிலும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அதிக அளவில் போட்டியிட்டு வருகின்றனர். குஜராத் தேர்தலும் அதற்கு விதிவிலக்கு இல்லை. சட்டத்தை உடைப்பவர்களே சட்டத்தை உருவாக்குபவர்களாக மாறினால், பாதிக்கப்படுவது என்னவோ நம் நாட்டின் ஜனநாயகம்தான்" என அது குறிப்பிட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications