வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு புகார்களுடன் முடிவடைந்தது குஜராத் முதல்கட்ட தேர்தல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா.. குஜராத் சட்டசபைத் தேர்தல்!- வீடியோ

    காந்திநகர்: குஜராத் சட்டசபையின் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

    ஆட்சியை தக்க வைக்கப்போவது பாஜகவா, அல்லது ஆட்சியை கைப்பற்றப்போவது காங்கிரசா என்ற எதிர்பார்ப்பு நாடுமுழுக்க நிலவுகிறது.

    Gujarat assembly election first phase poll- Live

    - மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    -குஜராத் முதல்கட்ட தேர்தல்: மதியம் 2 மணி நிலவரப்படி 45.61 சதவீத வாக்குப்பதிவு

    -மாலையில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்ப்பு

    -குஜராத் சட்டசபை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு: 3 மணி நிலவரப்படி, 35.52% வாக்குகள் பதிவு

    -குஜராத் முதல் கட்ட வாக்குப் பதிவு- 30%

    - முதல் கட்ட வாக்குப் பதிவில் 21.09% வாக்குகள் பதிவாகி உள்ளன

    -இதுவரை 18% வாக்குகள் பதிவு

    - குஜராத்தின் உப்லேடாவில் 126 வயது வாக்காளர் அஜிபா வாக்களித்தார்

    - 70 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக தகவல்

    - பழுதடைந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்

    - குஜராத்தின் வடக்கு சூரத்தில்தான் மிக குறைவான வாக்காளர்கள் 1,57,520 பேர்

    - கம்ரேஜில் அதிகபட்சமாக 4,28. 695 பேர் வாக்காளர்கள்.

    - ஜூனாகத்தில் பாஜகவின் ரேஷ்மா பட்டேலுக்கு எதிராக பட்டேல் இளைஞர்கள் போராட்டம்; ஹர்திக் பட்டேல் அணியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர் ரேஷ்மா படேல்

    - இன்றைய வாக்குப் பதிவு நடைபெறும் கட்ச் மாவட்டத்தின் அப்டாசா தொகுதிதான் மிகப் பெரியது. மொத்தம் 6278 ச.கிமீ பரப்பளவு கொண்டது இது.

    - சூரத்தில் உள்ள கரன்ஞ் தொகுதிதான் மிகச் சிறிய தொகுதி. மொத்தமே 4 ச.கிமீ பரப்பளவு கொண்டது இது.

    - இன்றைய தேர்தல் களத்தில் 57 பெண் வேட்பாளர்கள் உள்ளனர்.

    - பரூச் அங்க்லேஸ்வர் வாக்குச் சாவடியில் மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் வாக்களித்தார்

    - காங்கிரஸ் கட்சி 110 இடங்களுக்கும் அதிகமாக வென்று ஆட்சி அமைக்கும் என அகமது படேல் நம்பிக்கை

    - ராஜ்கோட்டில் 30 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது

    - காலை 10 மணி நிலவரப்படி 15% வாக்குகள் பதிவு

    - இன்று காலை 9 மணி வரை 8% வாக்குகள் பதிவு

    - தற்போது முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில் கடந்த தேர்தலில் 67 இடங்களை பாஜகவும் காங்கிரஸ் 16 ஐயும் கைப்பற்றியிருந்தது.

    - முதல் கட்டவாக்குப் பதிவு நடைபெறும் சவுராஷ்டிரா பகுதியானது 11 மாவட்டங்களைக் கொண்டது.

    - சவுராஷ்டிரா பிராந்தியம்தான் பட்டேல்கள் அதிகம் வசிக்கும் பகுதி.

    - இன்று வாக்குப் பதிவை எதிர்கொள்ளும் சூரத்தும் பாஜகவின் தலைவிதியை தீர்மானிக்கும் பகுதி.

    - சூரத்தில் வைரம் பட்டை தீட்டும் தொழில், ஜவுளித்துறை, ஜிஎஸ்டியால் மிகக் கடுமையாக பாதிப்பு

    - இன்றைய தேர்தல் களத்தில் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, பிற்படுத்தப்பட்ட சமூகமான தாக்குர் தலைவர் அல்பேஸும் இருக்கின்றனர்.

    - ராஜோட்ட் ரவி வித்யாலாய வாக்குச் சாவடியில் கிரிக்கெட் வீரர் புஜாரா வாக்களித்தார்

    - டிசம்பர் 14-ல் 93 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

    - 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளில் டிச. 14-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

    - முதல் கட்ட வாக்குப் பதிவில் 24,689 வாக்குச் சாவடிகளில் 27,158 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    - முதல் கட்ட வாக்குப் பதிவில் போட்டியிடும் 977 வேட்பாளர்களில் 198 பேர் கோடீஸ்வரர்கள்

    - பரூச் பாகுமலி வாக்குச் சாவடியில் திருமணகோலத்துடன் மணமக்கள் வாக்களித்தனர்

    -சூரத்தில் 24 மின்னணு இயந்திரங்கள் தொழில்நுட்ப பிரச்சனைகளால் பழுதடைந்தன

    - அம்ரேயில் வட்லி கிராமத்திலும் மின்னணு இயந்திரங்கள் பழுது. வாக்காளர்கள் நீண்டவரிசையில் காத்திருப்பு

    -குஜராத்தின் 5 மாவட்டங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது

    - ராஜ்கோட்டின் ஜேத்பூரில் 10 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது

    -குஜராத்தில் 150-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றுவோம்: குஜராத் பாஜக தலைவர் ஜிது வகானி

    -ராஜ்கோட் தொகுதியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வாக்களித்தார்.

    -ராஜ்கோட் மேற்கு தொகுதியில் விஜய் ரூபானி போட்டியிடுகிறார்

    -குஜராத்தில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா நம்பிக்கை

    -குஜராத் தேர்தல் தொடர்பான கருத்துகணிப்புகளில் பாஜகவுக்கு சாதகம்; ஆனால் கணிசமான இடங்கள் குறையும் எனவும் சர்வே முடிவுகள்

    - சூரத், பாவநகரில் நகரில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெறுகிறது

    - குஜராத் தேர்தலில் முதல் முறையாக அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் வாக்களித்தது தொடர்பான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது.

    - முதல் கட்ட வாக்குப் பதிவில் 1.16 லட்சம் தேர்தல் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.

    - முதல் கட்ட தேர்தலில் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    - 24,689 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

    - 2.12 கோடி பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்கின்றனர்

    -குஜராத்தில் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

    -பெண்கள் உட்பட வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்

    -குஜராத்தில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் தொடங்கியது

    -89 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

    -குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு எந்த சவாலும் இல்லை- முதல்வர் விஜய் ரூபானி

    -ஜாம்நகர் ஊரக தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்கள் போட்டி

    -ஜகாடியா, காண்டேவி தொகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 3 வேட்பாளர்கள் போட்டி

    -குஜராத் தேர்தலில் மக்கள் பெருமளவில் வாக்களிக்க பிரதமர் மோடி அழைப்பு

    -இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்ட வேண்டும் என்று டிவிட்டரில் மோடி அழைப்பு

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+