அரசு நிலத்தை 'சகாய'விலைக்கு மகளுக்காக அள்ளிக்கொடுத்த ஆனந்திபென் படேல்.. பாஜகவுக்கு சிக்கல்!
அகமதாபாத்: குஜராத்தில் அரசு நிலத்தை மிகவும் குறைவான விலைக்கு மகள் நடத்தும் நிறுவனத்துக்கு அம்மாநில முதல்வர் ஆனந்திபென் படேல் வழங்கியதாக சர்ச்சை வெடித்துள்ளது. ஊழலற்ற கட்சி என பெருமை பேசிவரும் பாஜகவுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலின் மகள் அனர் ஜெயேஷ் படேல் Wildwoods Resorts and Realties என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருகிறார்.
இந்நிறுவனத்துக்கு 2010-11ஆம் ஆண்டு குஜராத்தின் கிர் சிங்கங்கள் சரணாலயத்தை ஒட்டிய 250 ஏக்கர் நிலம் மிகக் குறைவான விலைக்கு 1 சதுர மீட்டருக்கு ரூ15 என்ற வீதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அப்போது மோடி தலைமையிலான குஜராத் அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார் ஆனந்திபென் படேல்
இதன் சந்தை மதிப்பு மிக அதிகமாக இருந்தபோதும் தமது மகளுக்காக குறைந்த விலையில் அரசு நிலத்தை விற்பனை செய்திருக்கிறார் ஆனந்திபென். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இந்த விவரங்கள் அனைத்தும் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. இதை கையிலெடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆனந்திபென்னுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications