நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண்கள் மாயமான வழக்கு.. குஜராத் ஹைகோர்ட் கோபம்.. 10ம் தேதி வரை கெடு
Recommended Video
அஹமதாபாத்: நித்தியானந்தா ஆசிரம வழக்கில் குஜராத் போலீசின் பதிலால் கோபம் அடைந்த குஜராத் உயர்நீதிமன்றம் நித்தியானந்தா ஆசிரமத்தில் மாயமான இளம்பெண்கள் டிசம்பர் 10ம தேதிக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நித்தியானந்தாவுக்கு சொந்தமாக ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த தனது இரண்டு மகள்களான லோபமுத்ரா சர்மா (21) மற்றும் நந்திதா சர்மா (18) ஆகியோரை மீட்டுத்தரக்கோரி குஜராத் உயர்நீதிமன்றததில், ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை குஜராத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரம்பத், தாகெர் ஆகியோர் அமர்வு முன்பு செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளம்பெண்களின் இருப்பிடம் குறித்து எந்தவித தகவலும் இல்லை என்று பதில் அளித்தார்.

நழுவ முயற்சி
இதனால் கோபம் அடைந்த நீதிபதிகள் வழக்கில் இருந்து குஜராத் காவல்துறை நழுவ முயற்சிப்பதாக விமர்சித்தனர். இளம்பெண்கள் நாட்டை விட்டு வெளியேறி இருந்தால் அவர்களை மீட்க இண்டர்போல் உதவியையும் வெளியுறவுத்துறையையும் நாட குஜராத் மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தினர் .

வழக்கு ஒத்திவைப்பு
மேலும் காணாமல் போன இளம்பெண்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளித்து வரும் டிசம்பர் 10ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒத்தவைத்தனர்.

போலீஸ் தகவல்
முன்னதாக ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களான லோபமுத்ரா சர்மா (21) மற்றும் நந்திதா சர்மா (18) ஆகியோர் வெளிநாடு தப்பி சென்று இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.

விரும்பவில்லை
இதனிடையே ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களும் முன்பு வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில், அவர்கள் நன்றாக இருப்பதாகவும், பெற்றோரைச் சந்திக்க விரும்பவில்லை என்றும், பெற்றோர்கள் மிரட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டி இருந்தனர்.

விரும்பவில்லை
இதனிடையே ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களும் முன்பு வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில், அவர்கள் நன்றாக இருப்பதாகவும், பெற்றோரைச் சந்திக்க விரும்பவில்லை என்றும், பெற்றோர்கள் மிரட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டி இருந்தனர்.

ஆஜர்படுத்துங்கள்
இந்த வீடியோவை பார்த்த உயர்நீதிமன்றம் இதில் உள்ளவற்றை நம்ப முடியாது என்றும் அவர்கள் நேரடியாக அனுப்பிய ஆவணங்கள் அல்லது வீடியோக்கள் எதுவும் பரிசீலிக்கப்படாது என்றும் சகோதரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications