குஜராத் டியூஷன் சென்டரில் பயங்கர தீ விபத்து.. பலியான மாணவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு!
காந்திநகர் : சூரத் நகரில் டியூசன் சென்டரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் 4 அடுக்குகளை கொண்ட வணிக வளாகத்தின் மேல் தளத்தில் டியூஷன் சென்டர் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அலறிய மாணவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என மாடியில் இருந்து குதித்தனர். அவர்களில் பலரை கீழே இருந்தவர்கள் காப்பாற்றினர்.
சில மாணவர்கள் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்த மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்து 19 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் இதில் நேற்றே 17 மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications