'ஞானவாபி மசூதியின் அடித்தள சாவியை ஒப்படைக்க வேண்டும்..' பரபரக்கும் நீதிமன்றம்! இன்று வழக்கு விசாரணை
லக்னோ: வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு ஒன்று இன்று அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே ஞானவாபி மசூதி உள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் ஒரு தரப்பினர் அங்கே முதலில் விஷேஷ்வர் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு அவுரங்கசீப் இந்த ஞானவாபி மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதன் அடிப்பையில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்ட நிலையில், தொல்லியல் துறை ஆய்வும் திட்டமிட்டபடி நடைபெற்றது. தொல்லியல் துறை ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த ஆய்வுக்கான காலக்கெடு கடந்த அக்டோபர் 6ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அறிக்கையைத் தாக்கல் செய்ய தொல்லியல் துறை கால அவகாசம் கோரியிருந்தது.
இதற்கிடையே ஞானவாபி வளாகத்தில் அமைந்துள்ள 'வியாஸ் ஜி கா தெஹ்கானா' என்ற தரைதளத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு இன்று அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
'வியாஸ் ஜி கா தெஹ்கானாவில் இருக்கும் அங்குள்ள வரலாற்று முக்கியமான பொருட்களை முறையாகப் பராமரிக்கவில்லை என்றால் அவை சேதமடையக்கூடும் என்ற அச்சம் காரணமாக அதன் சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்று இந்த வழக்கில் இந்து அமைப்பினர் தரப்பில் மதன் மோகன் யாதவ் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த போது விஜய் சங்கர் ரஸ்தோகி என்பவர் தன்னையும் இந்த வழக்கில் மனுதாரராகச் சேர்த்துக் கொள்ளும்படி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்படி கடந்த நவ. 20ஆம் தேதி இவர் தனது வாதங்களை முன்வைத்தார். இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications