ஞானவாபி மசூதி: உண்மை வயது கண்டறியும் கார்பன் பரிசோதனை தொடர்பாக அக்.11-ல் உத்தரவு: வாரணாசி கோர்ட்
வாரணாசி: சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியின் உண்மை வயது தொடர்பான கார்பன் டேட்டிங் எனப்படும் கார்பன் பரிசோதனை தொடர்பாக அக்டோபர் 11-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரி முதன் முதலாக 1991-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 2019-ம் ஆண்டு ஞானவாபி மசூதியில் ஆய்வு கோரி வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் 2021-ம் ஆண்டு ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதித்தது. மேலும் டெல்லியை சேர்ந்த 5 பெண்கள், ஞானவாபி மசூதி வளாகத்தில் மா சிருங்கார் கௌரி உள்ளிட்ட தெய்வங்களை தரிசனம் செய்து வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.
கோயில், மசூதி, சர்ச்.. ஒரே நாளில் அடுத்தடுத்து சென்று ஆசி பெற்ற ராகுல்! உற்றுப் பார்க்கும் கர்நாடகா
கடந்த மே மாதம், ஞானவாபி மசூதியை வீடியோ பதிவு செய்ய தடை கோரி மஸ்ஜித் இந்த ஜாமியா என்ற முஸ்லிம் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகியது. சர்ச்சைக்குரிய சிவலிங்கம் பகுதியை பாதுகாக்கவும் தொழுகை நடத்த அனுமதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இவ்வழக்கை வாரணாசி நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்க்ளை வழிபட அனுமதி கோரிய 5 பெண்கள் மனுவை விசாரணைக்கு ஏற்றது வாரணாசி நீதிமன்றம். இவ்வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, ஞானவாபி மசூதியின் உண்மையான வயது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்கான கார்ப்ன் டேட்டிங் குறித்து அக்டோபர் 11-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.