Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலில் தன்னை கிண்டல் செய்த நபர் பற்றி ட்வீட் போட்ட பெண்: கைது செய்த போலீசார்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: டெல்லியில் இருந்து பீகாருக்கு ரயிலில் தனியாக பயணம் செய்த இளம் பெண் தன்னை கிண்டல் செய்து, அசிங்கமாக நடந்து கொண்டவர் பற்றி ட்வீட் போட்டதை பார்த்து ரயில்வே அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த நபரை கைது செய்தது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு தனியாக பயணம் செய்துள்ளார். அவர் தனியாக பயணிப்பதை கவனித்த ஒரு ஆண் அவரை கிண்டல் செய்ததுடன் அசிங்கமாக நடந்து கொண்டார்.

Harassed girl's tweet to railway ministry lands man in jail

அவரின் செயலை தாங்க முடியாத அந்த பெண் இது குறித்து ட்விட்டரில் தெரிவித்தார். அவரது ட்வீட்டை பார்த்த ரயில்வே அமைச்சகம் உடனே இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.

ரயில்வே போலீசார் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். சரியான நேரத்தில் உதவியதற்காக அந்த பெண் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கும், அவரது அமைச்சகத்திற்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணை கிண்டல் செய்து, அசிங்கமாக நடந்து கொண்ட நபர் தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+