சட்டசபை ரகளை 'கேப்பில்' ஏக சில்மிஷம்: கேரளா காங். எம். எல்.ஏக்கள் மீது பெண் எம்.எல்.ஏக்கள் புகார்!
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபையில் அமளியின் போது தங்களிடம் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முறைகேடாக நடந்து கொண்டதாக 5 பெண் எம்.எல்.ஏக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
கேரள சட்டசபையில் கடந்த 13-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது, அவரை கண்டித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர் மாணிக்கு ஆதரவாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர். இதில் கம்யூனிஸ்ட் பெண் எம்.எல்.ஏ.க்களிடம் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கிளம்பியது.

கம்யூனிஸ்ட் பெண் எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் தன்னை காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாசன் நாயர் இடுப்பை பிடித்து தள்ளியதாக பகிரங்க குற்றம் சாட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் கம்யூனிஸ்டு பெண் எம்.எல்.ஏ.க்கள் ஜமீலா பிரகாசம், லத்திகா, சலீகா, கீதா கோபி, பிஜுமோள் ஆகியோரும் திருவனந்தபுரம் போலீசில் இது தொடர்பாக 5 பேரும் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர்.
அதில், சட்டசபையில் தங்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிவதாசன் நாயர், வாஹித், ஏ.டி. ஜார்ஜ், டொமினிக் பிரசன்டேசன், சிபு பேபி ஜான் ஆகியோர் மீதுதான் பெண் எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சட்டசபையிலுமா?












Click it and Unblock the Notifications