ஒரே கிராமத்தில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள்.. ஹரியானா தேர்தலில் வெற்றி கொடி நாட்டிய ‘லால்கள்’ பரம்பரை
சிர்சா: ஹரியானா சட்டசபை தேர்தலில் ஒரே கிராமத்தில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னாள் துணை பிரதமர் தேவிலால் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ஹரியானா அரசியலில் தேவிலால், பன்சிலால், பஜன்லால் குடும்ப வாரிசுகள்தான் கோலோச்சி வருகின்றனர். நாட்டின் துணை பிரதமராக இருந்தவர் தேவிலால். அவரது மகன் ஓம்பிரகாஷ் சவுதாலா ஹரியானா முதல்வராக இருந்தவர்.
ஊழல் வழக்கில் ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்டோர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அஜய் சவுதாலா மகன்தான் துஷ்யந்த் சவுதாலா.

வாரிசு அரசியல்
இவர்களின் வாரிசு அரசியலைத்தான் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்தது பாஜக. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஹரியானா தேர்தல் பிரசாரத்தில் வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

குறிவைக்கப்பட்ட சவுதாலா குடும்பம்
குடும்ப வாரிசுகளின் கோட்டையான சிர்சா, தாத்ரி மற்றும் ஹிசார் மாவட்டங்களில் இந்த பிரசாரத்தை முன் வைத்தது பாஜக. குறிப்பாக சவுதாலா குடும்பத்தினரை மிகக் கடுமையாக விமர்சித்தது பாஜக.

ஒரே குடும்பத்தின் 11 பேர் போட்டி
இத்தனைக்கும் தேவிலால் பேரன்கள் தனித்தனியே பிரிந்து கிடந்துதான் தேர்தலை எதிர்கொண்டனர். ஆனாலும் தேர்தலில் அதிரடி வெற்றியை பெற்றுள்ளனர். இந்த பிரதான தலைவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

வென்ற துஷ்யந்த்
தேவிலால் பேரன்களில் ஒருவரான துஷ்யந்த் சவுதாலா, ஜேஜேபி எனும் தனிக்கட்சியை தொடங்கிய கையோட் உசான கலான் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு பாஜகவின் பிரேம் லதாவை 47,452 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வெற்றி பெற்ற துஷ்யந்த் தாய்
துஷ்யந்த் சவுதாலாவின் தாயார் நய்னா சவுதாலா, பத்ரா தொகுதியில் போட்டியிட்டார். அவர் முன்னாள் முதல்வர் பன்சிலால் மகன் ரன்பீர் மகேந்திராவை 13,704 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ரஞ்சித்சிங் சுயேட்சையாக வெற்றி
தேவிலால் மகன்களில் ஒருவரான ரஞ்சித் சிங், ரெய்னா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 19,431 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேவிலால் மற்றொரு பேரனான அபேய் சவுதாலா, எல்லனாபாத்தில் போட்டியிட்டு 11,922 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

பாஜகவை வீழ்த்திய பஜன்லால் மகன்
ஹரியானாவில் நீண்டகாலம் முதல்வர் பதவியில் இருந்தவர் பஜன்லால். அவரது மகன் குல்தீப் பிசோனி ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளராக டிக்டாக் புகழ் சோனாலியை 29,471 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தேவிலால் பேரன் தோல்வி
பாஜகவில் இணைந்து போட்டியிட்டு தேவிலாலின் மற்றொரு பேரன் ஆதித்யா தேவிலால், தப்வாலி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். அவரை தோற்கடித்த அமித்சிகாவும் தேவிலால் குடும்பத்துக்கு தூரத்து உறவினர்தான்.

யார் யார் தோல்வி?
பஜன்லாலின் மூத்த மகன் சந்தர் மோகன் பஞ்ச்குலா தொகுதியிலும் பன்சிலால் மருமகனான காங்கிரஸ் வேட்பாளர் சோம்பிர் சங்வான் லோகரு சட்டசபை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினர். ஹரியானா அரசியலில் கோலோச்சிய ‘லால்' பரம்பரைகளுக்கு எதிரான பாஜக பிரசாரத்தை வாக்காளர்கள் புறக்கணித்துவிட்டனர் என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

5 எம்.எல்.ஏக்களுக்கு ஒரே கிராமம் பூர்வீகம்
இதில் இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது. ஹரியானா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேவிலால் குடும்பத்தைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏக்களும் சிர்சா மாவட்டம் சவுதாலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதாவது ஒரே கிராமத்தில் இருந்து ரஞ்சித் சிங், அபேய் சவுதாலா, நய்னா சவுதாலா, துஷ்யந்த் சவுதாலா, அமித் சிகா ஆகிய 5 எம்.எல்.ஏக்கள் ஹரியானா சட்டசபைக்குள் நுழைகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications