காரை ஆத்துல தள்ளி விட்ட இளைஞர்.. காரணத்தை கேட்டால்.. அசந்துடுவீங்க.. ஷாக் ஆயிடுவீங்க!
பிஎம்டபிள்யூ காரை ஆற்றில் தள்ளிவிட்ட இளைஞரின் வீடியோ வைரலாகிறது
அரியானா: ஆத்துல பிஎம்டபிள்யூ சொகுசு கார் மிதந்து கிடப்பதை பார்த்து, யாருக்கு என்ன ஆச்சோ என்று ஹரியானா மக்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்! பிறகுதான் விஷயமே வேறு என்று தெரிந்தது!
அரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய பணக்கார அப்பாவிடம் புதிதாக ஜாகுவார் கார் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு சொல்லி உள்ளார்.
தான் விரும்பிய காரை வாங்கி தராததால், ஆத்திரமடைந்த இளைஞர் ஏற்கனவே பெற்றோர் வாங்கிக் கொடுத்திருந்த பிஎம்டபிள்யூ காரை கொண்டு போய் ஆற்றில் தள்ளிவிட்டார். பிறகு அதனை வீடியோவாகவும் எடுத்து இணையத்தில் பதிவேற்றி விட்டார்.
மிதந்து வந்த காரை பார்க்க அந்த பகுதி மக்களே கூடிவிட்டனர். மிதந்து கொண்டே வந்த சொகுசு கார், திடீரென ஆற்றின் நடுவில் இருந்த புற்களில் சிக்கி கொண்டு அங்கேயே நின்றுவிட்டது. இளைஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, நட்டாற்றில் கார் நின்றுவிட்டதால்,உள்ளூர் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் அதை வெளியே கொண்டு வர அந்த இளைஞரே முயற்சி செய்தார்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், காரில் இருந்த அந்த இளைஞரையும், காரையும் மீட்டனர். மேலும் போலீசார் இது சம்பந்தமாக விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்லுவாங்களே.. இந்த காரின் விலை 35 லட்சத்துக்கும் மேல! என்னதான் பணக்கார வீட்டுபிள்ளையா இருந்தாலும்.. திஸ் இஸ் டூ மச்!