சென்னை பெண்ணை பலிகொண்ட பெங்களூர் குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் கைது
பெங்களூர்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெங்களூரில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு பெங்களூர் எம்.ஜி.ரோடு பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த கைதின் மூலம், குண்டு வெடிப்பு வழக்கில் முதல்முறையாக துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.
2014ம் ஆண்டு, டிசம்பர் 28ம் தேதி பெங்களூர், எம்.ஜி.ரோட்டை அடுத்த சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

சென்னை பெண்
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி, மண்டை ஓடு உடைந்ததில், சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்த பவானி தேவி என்ற இரு குழந்தைகளின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்து மீண்டனர்.

என்.ஐ.ஏ விசாரணை
இந்த கொலை தாக்குதல் வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு தேக்கமடைந்தது. பெங்களூர் போலீசாரால் விசாரிக்க முடியாத நிலையில், சமீபத்தில் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு எடுத்தது.
வீடியோ காட்சி
என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, சம்பவ இடத்தின் அருகே பதிவான வீடியோவில் ஒரு காட்சி அவர்களுக்கு சந்தேகத்தை தூண்டியது. அந்த வீடியோ காட்சியில் எம்.ஜி.ரோடு பகுதியில் கையில் பையுடன், தலையில் தொப்பியும், நீல நிற சட்டையும் அணிந்து ஒரு செல்லும் நபர் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த நபர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது.

மக்களிடம் கோரிக்கை
சந்தேகத்திற்கிடமான அந்த நபர் கையில் வெடிகுண்டு இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.எனவே அந்த வீடியோவை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவிலுள்ள நபர் குறித்து தகவல் தெரிந்தால், பெங்களூர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஐஎஸ்ஐஎஸ்
இந்நிலையில், இவ்வழக்கில் தற்போது முக்கிய துப்பு கிடைத்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின்பேரில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா பகுதியில் அலீம்ஜப் அப்ரிடி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடன் தோற்றமும், குண்டு வெடிப்பு வீடியோவில் இருப்பவர் தோற்றமும் ஒரே போன்று இருந்தது.

குண்டு வைத்ததாக ஒப்புதல்
இதையடுத்து அப்ரிடியிடம் உரிய வகையில் விசாரித்தபோது, குண்டு வைத்தது தான்தான் என்பதை ஒப்புக்கொண்டார். 3 வருடங்களாக பெங்களூரில் தங்கியிருந்து மெக்கானிக்காக வேலை பார்த்தபடி, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கான ஆதாரங்களை காவல்துறை திரட்டியதும், பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications