கனமழை பெய்தும் பயனில்லை... கொளுத்தும் வெயிலுக்கு தெலுங்கானாவில் 249 பேர் பலி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இடையில் கன மழை பெய்த போதும் கூட வெப்பம் குறைந்தபாடில்லை. கடும் வெயிலுக்கு இதுவரை 249 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தைப் போலவே இந்தாண்டும் ஆந்திரா, தெலுங்கானாவிலும் வெயில் அதிகமாக உள்ளது. உண்மையில் தமிழகத்தை விட அங்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது.
கொளுத்தும் வெயிலால் அங்கு தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது.

பலி...
இதுவரை 249 பேர் அங்கு வெயில் காரணமாக உயிரிழந்துள்ளதாக மாநில இயற்கைப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தெலுங்காவின் சில பகுதிகளில் வெப்ப நிலை சற்று குறையும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு...
மேலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தெலுங்கானாவின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் வெயில்...
கடந்த சனிக்கிழமையும் அதற்கு முதல் நாளும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அங்கு வெப்ப நிலை வெகுவாக குறைந்தது. ஆனாலும் தற்போது மீண்டும் வெயில் அடித்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்தாண்டு அதிகம்...
கடந்தாண்டு இந்தியாவிலேயே வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் அதிகம் என்பது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications