தெலுங்கானவில் கொதித்த வெப்பத்திற்கு 50 லட்சம் கறிக்கோழிகள் பலி!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 50 லட்சம் கறிக்கோழிகள் கடும் வெப்பத்திற்கு பலியாகியுள்ளன.
இதனால் கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் கடும் நஷ்டத்திற்கு உள்ளானதுடன், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கறிக்கோழியின் விலை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடும் வெப்பத்தால் நாளொன்றுக்கு லட்சக்கணக்ககான கோழிகள் பலியாகி வருவதாகவும், இதுவரை 57 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்னனர்.

குறிப்பாக மே 17 ஆம் தேதிக்கு பின் வெப்பநிலை 42 டிகிரியாக உயர்ந்ததால் கறிக்கோழிகள் செத்து மடியத் துவங்கின. வெயிலை தணித்து குளுமையை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை புகுத்தியபோதும், ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் எடுபடவில்லை.
இதனால் 2 லட்சம் கோழிகள் உள்ள தனது பண்ணையில் ஒரு சில நாளிலேயே 30 ஆயிரம் கோழிகள் இறக்க நேரிட்டதாக தெலுங்கானா கோழிப்பண்ணை கூட்டமைப்பு தலைவரான எர்ரபெள்ளி பிரதீப் ராவ் கூறியுள்ளார்.
கோழிகளின் இறப்பு அதிகமானதால் அம்மாநிலத்தில் முட்டை விலையும் அதிகரித்துள்ளது. கடந்த மே 17 ஆம் தேதி 100 முட்டைகள் 260 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், ஜூன் 3 ஆம் தேதி 100 முட்டையின் விலை 327 ஆக உயர்ந்துள்ளது. அதாவது நாளொன்றுக்கு 50 பைசா வீதம் முட்டை விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications