குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகள்... நீதிபதி மிஸ்ரா கொடுத்த சுளீர் தீர்ப்பு!
Recommended Video

டெல்லி: குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்த வழக்கில் இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கொடுத்த சுளீர் தீர்ப்பு இதுதான்.
எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. 2011ல் பல தனி நபர்கள், அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்தது.

இதன் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இதில் நீதிபதி தீபக் மிஸ்ரா பளாரென அடித்தாற்போல் தனது தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் உள்ள விவரங்கள் இவைதான்:
1. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது.
2. அரசியலில் ஊழலும், முறைகேடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை
3. அரசியல் கட்சிகள் தாங்களாகவே அடிப்படை நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
4. குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிறுத்துவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
5. தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் இடத்தில் நாங்கள் இல்லை
இவைதான் தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பின் சாராம்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications