குடியரசு தினவிழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்.. உளவு துறை எச்சரிக்கை
குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி: குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்காக 230 முதல் 250 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் உளவு துறை தகவல் தெரவிக்கின்றது.
குடியரசு தின விழா நாடுமுழுவதும் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்ட எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும், ஆனால் எத்தனை பேர் அங்கு உள்ளனர் என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர் இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹீதின் இயக்க தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. உளவுத்துறையின் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலையடுத்து தலைநகர் டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் குடியரசு தினவிழா அன்று விமான நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் அல்லது விமான கடத்தல் சம்பவங்களில் ஈடுபடலாம் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. மும்பையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்த முயன்றது போன்று மீண்டும் நடைபெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்படவுள்ளனர். பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே விமான நிலையத்துக்குள்ளேயும், வெளியேயும் அனுமதிப்படுவர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் உள்ளூர் காவல்துறையினரை அதிகளவில் குவித்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications