குடியரசு தினவிழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்.. உளவு துறை எச்சரிக்கை
குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி: குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்காக 230 முதல் 250 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் உளவு துறை தகவல் தெரவிக்கின்றது.
குடியரசு தின விழா நாடுமுழுவதும் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்ட எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும், ஆனால் எத்தனை பேர் அங்கு உள்ளனர் என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர் இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹீதின் இயக்க தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. உளவுத்துறையின் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலையடுத்து தலைநகர் டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் குடியரசு தினவிழா அன்று விமான நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் அல்லது விமான கடத்தல் சம்பவங்களில் ஈடுபடலாம் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. மும்பையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்த முயன்றது போன்று மீண்டும் நடைபெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்படவுள்ளனர். பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே விமான நிலையத்துக்குள்ளேயும், வெளியேயும் அனுமதிப்படுவர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் உள்ளூர் காவல்துறையினரை அதிகளவில் குவித்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications