விபச்சார வழக்கில் சிக்கிய 2 டிவி நடிகைகள்: ஒரு இரவுக்கு ரூ.50,000-ரூ. 1 லட்சம்!
மும்பை: மும்பையில் விபச்சாரம் நடத்தி வந்த இடத்தை சோதனை செய்த போலீசார் சாவ்தான் இந்தியா கிரைம் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மற்றும் மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
மும்பை கோரேகாவ்ன் பகுதியில் பெரும்புள்ளிகளுக்கு பெண்களை சப்ளை செய்யும் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரு போலீஸ்காரர் பெண்களை சப்ளை செய்பவர் போன்று அந்த கூட்டத்தை அணுகினார்.

இதையடுத்து பிலிம் சிட்டி அருகே உள்ள கட்டிடத்தில் போலீசார் சோதனை செய்ததில் சாவ்தான் இந்தியா என்ற பெயரில் டிவியில் ஒளிபரப்பாகும் கிரைம் நிகழ்ச்சியில் தோன்றிய நடிகை, மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் விபச்சார தொழிலை நடத்தி வந்த சாய்ரா மற்றும் அஷ்ரப் என்கிற அமன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் இந்த கும்பலின் தலைவனை பிடிக்க முடியவில்லை.
நடிகைகள் மற்றும் மாடல்களின் புகைப்படங்களை பெரும்புள்ளிகளுக்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பி அவர்கள் பிடித்திருக்கிறது என்று கூறினால் பெண்களை அவர்களிடம் அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண்கள் ஒரு இரவுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் வாங்கி வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications