கோவாவில் பலத்த பாதுகாப்பு.. வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி 144 தடை!

கோவா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவதால் கோவாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பானாஜி: கோவாவில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவா சட்டசபை தொகுதிகள் மொத்தம் 40. இந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் இம்மாதம் 4ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதனால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவா அரசு செய்துள்ளது.

High security in Goa for vote counting

வட கோவாவின் 19 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கேம்பால் பாலபவனில் நடைபெறுகிறது. தென் கோவாவிற்கான வாக்கு எண்ணிக்கை போர்டாவில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றியுள்ள இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட கோவாவில் மட்டும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். 83 சதவீத வாக்கு பதிவுகள் நடந்து கோவா சட்டசபைத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, மகாராஷ்டிரா கோமந்தக்கட்சி மற்றும் சுயேட்சைகள் என 251 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை 11.30 மணிக்கு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் வென்று ஆட்சியை பிடிப்பார்கள் என்று அப்போது தெளிவாக தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+